முயற்சி என்பதை மறக்காதே
தோல்வி என்பதை வெறுக்காதே
வெற்றி என்பதை இலக்காய் கொண்டு
வீர நடை போட்டு விடு
நம்பிக்கை என்பதை உன் மேல் வை
நாளும் கடவுளை துதியும் செய்
பொறுத்திருந்து செயல்பட்டு
பொறுமையோடு வெற்றி பெறு
நாளை இருக்கிறது என்றெண்ணி
இன்றைய பொழுதை இழந்து விடாதே
இன்றே எதையும் செய்துவிட்டு
ஒன்றை மட்டும் நினைவில் கொள்
வெற்றி என்பதை இலக்காய் கொண்டு
நம்பிக்கை என்பதை மனதில் கொண்டு
முயற்சி என்பதை செயலில் கொண்டு
வெற்றி என்பதை பிடித்து விடு .
No comments:
Post a Comment